ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே அருமையாய்
இயேசு நமக்களித்த
அளவில்லா கிருபை பெரிதல்லவோ
இப்புது தினமதிலே
ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி பொங்கிடுதே
என் உள்ளத்திலே
பேரன்பின் பெருவெள்ளமே - அல்லேலுயா!
கடந்த நாட்களில் கைவிடாமலே
கண்மணி போல் எம்மைக் காத்தாரே
கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
கருத்துடன் பாடிடுவோம் - ஆத்துமமே
படகிலே படுத்து உறங்கினாலும்
கடும் புயல் அடித்து கவிழ்ந்தாலும்
கடலையும் காற்றையும் அமர்த்தி
எம்மைக் காத்தாரே அல்லேலூயா - ஆத்துமமே
யோர்தானைக் கடந்தோம் அவர் பெலத்தால்
எரிகோவைத் தகர்த்தோம் அவர் துதியால்
இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தே
என்றென்றுமாய் வாழுவோம் - ஆத்துமமே
பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்
அதி சீக்கிரத்தில் முடிகிறதே
விழிப்புடன் கூடித் தரித்திருப்போம்
விரைந்தவர் வந்திடுவார் - ஆத்துமமே